செய்திகள் :

தென்காசி: மர்ம உறுப்பை அறுத்து திருநங்கை கொலை; திருநங்கைகள் 2 பேர் கைது; நடந்தது என்ன?

post image

தென்காசி மாவட்டத்தில், பெண்ணாக மாறுவதற்காக மர்ம உறுப்பைக் கத்தியால் அறுத்ததில் அதிக ரத்தப்போக்குக் காரணமாகத் திருநங்கை ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ஆலங்குளம் அருகே பரம்பு மாடி தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. திருநங்கையான இவருடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசர்குளத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசன் என்ற சைலு என்பவர் கடந்த 2 வாரங்களாகத் தங்கி இருந்தார். இவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மகாலட்சுமியின் வீட்டில் சைலு திடீரென்று மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியவாறு கிடந்தார்.

ஷைலு

உடனே அவரை மகாலட்சுமி உள்ளிட்ட திருநங்கைகள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சைலு இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கடையம் போலீரஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் மேரி ஜெமீதா மற்றும் போலீஸார், சைலுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சைலு பெண்ணாக மாறுவதற்காகத் தனது மர்ம உறுப்பைத் தானே அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள முயற்சி செய்தபோது இறந்துவிட்டதாகத் திருநங்கைகள் தெரிவித்தனர். எனினும் உடன் தங்கியிருந்த திருநங்கைகளின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைது

போலீஸாரின் இந்த விசாரணையில், சைலு பெண்ணாக மாறுவதற்காக அவரின் மர்ம உறுப்பை மகாலட்சுமியும், மற்றொரு திருநங்கையான மதுமிதா என்பவரும் சேர்ந்து கத்தியால் அறுத்ததும், இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் அவர் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கவனக்குறைவாகச் செயல்பட்டது, குற்றத்தை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் மகாலட்சுமி, மதுமிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்." என்றனர்.

கைதான 2 பேரும், ஏற்கனவே பெண்ணாக மாற முயன்ற பலருக்கு மர்ம உறுப்பை அறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ஆம்பூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பிரமுகர் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன்பால். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னா... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனைவி சிக்கியது எப்படி?

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா (22). இவரது காதலி எலன் மேரி (21). இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியவர்கள் வ... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுசெய்த போலீஸ்!

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் ஷெஹ்னாஸ் சிங். இவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு போதைப்பொருள் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவி... மேலும் பார்க்க

பீகார்: பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல்! - ரூ.25 கோடி மதிப்பிலான நகை கொள்ளை

பீகாரின் அர்ராவில் உள்ள தனிஷ்க் ஷோரூமில் இன்று ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். பீகார் மாநிலம், அர்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

ஸ்ரேயா கோஷல் கரியர் பற்றி பரவிய நியூஸ்; 'அது பொய்... உஷாராக இருங்கள்!'- மக்களை எச்சரிக்கும் டி.ஜி.பி

சமீபத்தில், 'பாடகி ஸ்ரேயா கோஷலின் கரியர் முடியப்போவதாகவும், அதற்கு காரணம் அவர் மைக் ஆன் ஆகியிருப்பது தெரியாமல் பேசியதும்' என்ற போஸ்ட் மற்றும் நியூஸ் லிங்க் வைரலாகியது. இப்படி பரவிய இந்த நியூஸ் லிங்க் ... மேலும் பார்க்க

5 கொரிய பெண்கள்; Excel Sheet, ரகசிய கேமரா- ஆஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி!

ஆஸ்திரேலியாவில் ஐந்து தென்கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பாலேஷ் தன்கர். இந... மேலும் பார்க்க