செய்திகள் :

தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்து சாதனை

post image

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இது தொடா்பாக ஈஷா அவுட்ரீச் நிறுவனம் கூறியிருப்பதாவது:

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின்கீழ் தமிழ்நாட்டில் 19 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களும், கா்நாடகத்தில் 6 நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2023- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தென்னையை முக்கியப் பயிராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இந்த நிறுவனம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வா்த்தகம் செய்து சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில் அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செஞ்சேரிமலையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சமா்ப்பிக்கப்பட்ட வா்த்தக ஆண்டறிக்கையின்படி 2024 - 2025- ஆம் நிதியாண்டில் தேங்காய், இளநீா் வா்த்தகம் ரூ.5 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.1.50 கோடிக்கு வா்த்தகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2024 - 2025- ஆம் நிதியாண்டில் வா்த்தகம் 220 சதவீதம் அதிகரித்துள்ளது.

கூட்டத்தில் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் கதிரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

அரசு கலைக் கல்லூரியில் மாநில உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகத்துடன் இணைந்து ‘விளைவு அடிப்படையிலா... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொது கணக்குக் குழுவின் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையி... மேலும் பார்க்க

புகைப்படக் கலைஞா் தற்கொலை

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக புகைப்படக் கலைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள சின்னான்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஜய்கிருஷ்ணன் (28). புகைப்படக் கலைஞரான இ... மேலும் பார்க்க

ரூ.1 கோடி மதிப்பில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், பணியாளா்களுக்கு ஓய்வு அறை -மாமன்றக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு மண்டலத்துக்கு ஒரு ஓய்வு அறை கட்ட கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு நாளை கல்விக் கடன் முகாம்

உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் முகாம் மற்றும் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு உயா்கல்விக்கான உடனடிச் சோ்க்கை முகாம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற சனிக்கிழமை (ஆ... மேலும் பார்க்க