செய்திகள் :

தெரு நாய்களுக்கு ரூ.2.88 கோடியில் சிக்கன், முட்டை சாதம் வழங்கும் திட்டம்! எங்கு தெரியுமா?

post image

தெரு நாய்கள் அதிகரிப்பு மற்றும் அதன் உடல்நலனைக் கருத்தில் கொண்டு தினந்தோறும் சிக்கன், முட்டை சாதம் வழங்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் தெரு நாய் தொல்லைகள் நமது நாட்டில் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாகவும் உருவாகியிருக்கிறது நாய்க்கடிப் பிரச்சினை. இதில், அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும் குணம் படைத்தவைகளாக உள்ளன. ஆனால், இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது என்று தெரியுமா?

காட்டில் வாழ்ந்த ஆதிமனிதன் முதலில் நிலம் நோக்கி வரும் போது, தனக்கு பயன்படக்கூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் சேர்த்து நாய்யையும் கூட்டிக்கொண்டே வந்தான்.

அவ்வாறு, வீட்டில் காவலுக்காக வெளியே இருந்த நாயினம் தற்போது வீட்டில் உள்ளேயே இருக்கும் வகையில் ஒரு உறுப்பினராகவே மாறியிருக்கிறது.

அந்த வகையில், தெருக்களில் சுற்றித்திரியும் ‘இண்டீஸ்’ என அழைக்கப்படும் இந்திய வகை நாய்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த நாய்களுக்கு தினந்தோறும் சத்தான உணவளிக்க முடிவெடுத்திருக்கிறது பெங்களூரு நகராட்சி நிர்வாகம்.

புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பெங்களூரு நகராட்சி) நாய்களுக்கு உணவளிக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நகரம் முழுவதும் 5,000 தெரு நாய்களுக்கு தினந்தோறும் சிக்கன் சாதம் வழங்க திட்டமிட்டுள்ளது. 367 கிராம் சிக்கன் சாதத்துக்கு, ஒரு நாய் வீதம் ரூ.22 செலவழிக்கும் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.2.88 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

'குக்கிர் திகார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காக பெங்களூரு கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆர்ஆர் நகர், தாசரஹள்ளி, பொம்மனஹள்ளி, எலகங்கா மற்றும் மகாதேவபுரா ஆகிய எட்டு மண்டலங்களிலும் ஒரு மண்டலத்திற்கு 500 நாய்களுக்கு தினசரி உணவு சேவைகளை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் எம்பி. கார்த்திக் சிதம்பரம் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்துள்ளார். நாய்களுக்கு உணவளிப்பதன் மூலம் ரேபிஸ் தொற்று அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக விமர்சித்துள்ளார்.

இருப்பினும், உணவின்றி பரிதாபமாக பலியாகும் நாய்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு பல்வேறு விலங்கு நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Bengaluru civic body to spend Rs 2.88 crore to feed 'chicken rice' to stray dogs

இதையும் படிக்க : ‘பிரேக்கிங் பேட்’ பாணியில் போதைப் பொருள் தயாரித்த 2 ஆசிரியர்கள் கைது!

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க