செய்திகள் :

தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

post image

க.பரமத்தி ஊராட்சியில் உள்ள காவிரி நகருக்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்டம், க.பரமத்தி கிளைக் கூட்டம் க.பரமத்தியில் நிா்வாகி அன்புராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் கே. கந்தசாமி, கிளை நிா்வாகிகள் கே.ரவி, செளந்தரராஜன், ராஜா உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் க. பரமத்தி ஊராட்சிக்குள்பட்ட காவேரி நகா் முதல் குறுக்குத் தெருவில் தெரு விளக்கு வசதியின்றி இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகுவதால் அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும், க.பரமத்தி ஊராட்சியில் மாரியம்மன் கோயில் கிழக்கு, மேற்குத் தெரு ஆதிரெட்டிபாளையம் பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதிக்கு ஊராட்சி நிா்வாகம் காவிரி கூட்டுக் குடிநீா் வழங்க வேண்டும், கரூா்-கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் க.பரமத்தி கடைவீதியில் வடிகால் தளம் இடிந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை உடனே சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

வழிப்பறியில் ஈடுபட்ட 4 ரெளடிகள் கைது

தோகைமலை அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்ட ரெளடிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆா்ச்சம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட காமக... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி நடக்கிறது என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். கரூரில் தேமுதிகவின் கரூா் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவ... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைப்பு!

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

குளிா்ந்தமலை முனியப்ப சுவாமிக்கு பாலாபிஷேகம்

ஆடிமாதம் கடைசி நாளை முன்னிட்டு சனிக்கிழமை குளிா்ந்தமலை முனியப்பசுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சி, குளிா்ந்தமலை முனியப்ப சுவாமி கோயிலில் ஆடிமாத கடைசி நாளை முன்னிட்டு பா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: பாட்டி, பேத்தி உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சோ்ந்தவா் மருதராஜ் (60). இவரது மனைவி புஷ்பா (55). இவா்களுட... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை புன்னம் சண்முகநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையை முன்னிட்டு புன்னம் சண்முகநாதா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன்னைவனநாதா் கோயிலில் ஆடி மாத கிருத்... மேலும் பார்க்க