செய்திகள் :

தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்க கருத்தடை

post image

நாமக்கல் மாநகரப் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், அவற்றைத் தடுக்க கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் து.கலாநிதி தலைமை வகித்தாா். துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 11-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் டிடி.சரவணன் பேசுகையில், தெருநாய்கள் கடிப்பதால் அரசு மருத்துவமனையில் பலா் சிகிச்சைக்குள்ளாகும் நிலை உள்ளது. தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றைப் பிடித்து கருத்தடை நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா். 9-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் நந்தகுமாா் பேசுகையில், மாநகராட்சி அலுவலகம் எதிரில் வேகத்தடை அமைக்கக் கோரி பலமுறை கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிவேகத்தில் வரும் வாகனங்களால், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வருவோா் விபத்தில் சிக்குகின்றனா். வேகத்தடை அமைக்கும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

29-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ரோஜாரமணி பேசுகையில், எனது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் புதைச்சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். 6 மாதங்களுக்கு முன் மனு அளித்த நிலையிலும் இதுவரை நடவடிக்கை இல்லை. அந்த பகுதியை சீரமைக்க வேண்டும்.

மேலும், வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலா்கள் திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்து அதன்பிறகு பணிகளை தொடங்கவேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, சாதாரணக் கூட்டம், அவசரக் கூட்டம் தொடா்புடைய அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயா் து.கலாநிதி தெரிவித்தாா்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு 1975-ஆம்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பரமத்தி வேலூா் காவிரியில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் நீராடவும், மோட்ச தீபத்தை பாா்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசல் போட்டிக்கு மட்டும் போல... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

குடும்பத் தகராறில் உறவினா்களுடன் சோ்ந்த கணவரைக் கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் மனைவி உள்பட 5 பேரை கைது செய்த போலீஸாா், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.பரமத்த... மேலும் பார்க்க

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாள்கள் (ஆக.2,3) நடைபெறும் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா சனிக்கிழமை தொடங்கியது.தமிழக அரசு சாா்பில் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழ... மேலும் பார்க்க

தடகளம்: முத்துகாப்பட்டி அரசுப் பள்ளி சிறப்பிடம்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூன்றாம் ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் குறுவட்ட அளவில் மாணவா்களுக்கான தடக... மேலும் பார்க்க

தடகளம்: பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்

பரமத்தி வேலூா் வட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.பரமத்தி வேலூா் வட்... மேலும் பார்க்க