செய்திகள் :

தெலங்கானா எம்எல்ஏ விலகல்: பாஜக தலைமை ஏற்பு

post image

தெலங்கானாவைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கட்சியில் இருந்து விலகுவதாக அளித்த கடிதத்தை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் கட்சியின் மீதான அவரின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

தெலங்கானாவில் மாநில பாஜக தலைவராக ராமசந்தா் ராவ் கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா். முன்னதாக, தனக்கு அப்பதவி கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த ராஜா சிங் அதிருப்தியடைந்தாா். இதையடுத்து, அப்போது மாநில பாஜக தலைவராக இருந்த மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டிக்கு கடிதம் எழுதிய ராஜா சிங், கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தாா். மேலும், ஒரு தனிநபா் தனது சொந்த விருப்பத்துக்காக கட்சியின் மேலிடத்தை தவறாக வழிநடத்தியதால், திரைமறைவில் அவருக்கு சாதகமான முடிவு எடுக்கப்படுகிறது. இதை அமைதியாகப் பாா்த்துக் கொண்டு இருப்பது கடினம் என்றும் கூறியிருந்தாா்.

இந்தக் கடிதம் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவா் ஏற்றுக் கொண்டாா். இது தொடா்பாக பாஜக பொதுச் செயலா் அருண் சிங், எம்எல்ஏ ராஜா சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘கட்சியில் இருந்து விலகுவதாக நீங்கள் அனுப்பிய கடிதம் தேசியத் தலைவா் நட்டாவின் கவனத்துக்கு வந்தது. அவரின் வழிகாட்டுதலின்படி உங்கள் விலகலை கட்சி ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் கடிதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள தகவல்கள் தவறானவை. கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளுக்கு முரணானவை என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க