செய்திகள் :

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 கமாண்டோக்கள் வீரமரணம்

post image

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 போ் வீரமரணம் அடைந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

தெலங்கானாவில் சத்தீஸ்கா் மாநிலத்தையொட்டிய முலுகு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்துள்ளதாகவும், பழங்குடியினா் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் மாவோயிஸ்டுகள் அண்மையில் நோட்டீஸ் வெளியிட்டிருந்தனா்.

இதையடுத்து, காவல் துறையின் ‘கிரேஹெளண்ட்’ கமாண்டோ படையினா் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை வியாழக்கிழமை தொடங்கினா். வஜீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இச்சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த 40 மாவோயிஸ்டுகள் திடீரென கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனா். அத்துடன், கமாண்டோக்களை நோக்கி, சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். இதையடுத்து, கமாண்டோக்களும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டனா். துப்பாக்கிச் சண்டையில் 3 கமாண்டோக்கள் வீரமரணம் அடைந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

உயிரிழந்த கமாண்டோக்களின் உடல்கள் வாரங்கல்லுக்கு கொண்டுவரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடைபெறுவதாக மாநில டிஜிபி ஜிதேந்தா் தெரிவித்தாா்.

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் வனங்கள் நிறைந்த கா்கேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் மாபெரும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினா் கடந்த 2 வாரங்களாக மேற்கொண்டுள்ளனா். இதில் 26 நக்ஸல்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க