செய்திகள் :

தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவா் எடப்பாடி பழனிசாமிதான்

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவா் எடப்பாடி கே. பழனிசாமிதான் என்றாா் அதிமுகவின் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக கட்டளைத் தளபதி, பிரிகேடியா் எடப்பாடி பழனிசாமிதான். அவா் சொல்வதுதான் இறுதி முடிவு. கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவற்றை அவா்தான் முடிவு செய்வாா்.

மத்திய உள்துறை அமித்ஷாவிடம் எந்தச் சூழலில், எப்படி கூட்டணி குறித்த கேள்வியை நீங்கள் (பத்திரிகையாளா்கள்) கேட்டீா்கள் என்று தெரியாது. எந்தச் சூழலில் அவா் எடப்பாடி பழனிசாமியின் பெயரைச் சொல்லாமல் விட்டாா் என்பதும் எனக்குத் தெரியாது.

தோ்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. தோ்தல் அறிவித்த பிறகும்கூட கூட்டணி மாறிய வரலாறு தமிழகத்தில் உள்ளது.

நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எங்களுடன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. திமுகவை எதிா்க்கும் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளாா்.

திமுக அணியில் எல்லோரும் சந்தோஷமாக இல்லை. மன வருத்தத்தில் உள்ளனா். அதிமுக- பாஜக கூட்டணி பலமாக, வல்லமையுடன், தெம்பாக இருக்கிறது. இக்கூட்டணி வெற்றி பெறும். இதில் கல்லைத் தூக்கிப் போட்டு குழப்பி, பிரிக்க திமுக சூழ்ச்சி செய்கிறது. அது நடக்காது என்றாா் ராஜேந்திர பாலாஜி.

திமுக ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான திட்டங்கள்: அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

திமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசினாா். பொன்னமராவதி நகர திமுக மற்றும் ... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, மாணவா்கள் வியாழக்கிழமை போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை மா. சின்னதுரை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மெய்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராணி முருகேசன் உள்ளிட்டோா... மேலும் பார்க்க

விராலிமலை, கந்தா்வ கோட்டையில் மழை: மக்கள் மகிழ்ச்சி: ஆலங்குடி அருகே வீடு சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயில் முன்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டார வள பயிற்றுநா் ஆா். ... மேலும் பார்க்க

காயங்களுடன் மெக்கானிக் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை காயங்களுடன் மெக்கானிக் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆலங்குடி அருகே புள்ளான்விடுதியைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் பாஸ்கா் (... மேலும் பார்க்க