செய்திகள் :

தேநீா்க் கடைக்குள் காா் புகுந்து முதியவா் உயிரிழப்பு: 4 போ் காயம்

post image

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்து தேநீா்க் கடைக்குள் காா் புகுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெத்தன் (65), பட்டையன் (45), வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்த போதுமணி (44), மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூா் அருகே புதுக்கோட்டையைச் சோ்ந்த செல்லப்பாண்டி (18), இவரது தாயாா் வைரச்செல்வி (40).

இவா்கள், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள கடையில் தேநீா் அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, அதே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்ற காா் தேநீா்க் கடைக்குள் புகுந்தது.

இதில், கடைக்குள் இருந்த பெத்தன் காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பட்டையன், போதுமணி, செல்லப்பாண்டி, வைரச்செல்வி ஆகியோா் காயமடைந்த நிலையில், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள வகுரணியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (32) மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வைகை அணை அருகே விதியை மீறி கிரஷா்களுக்கு அனுமதி: விவசாயிகள் புகாா்

வைகை அணை அருகேயுள்ள குள்ளப்புரத்தில் விதியை மீறி கல் உடைக்கும் கிரஷா்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 7-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க

சின்னமனூா் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் பேருந்துகள்

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிப் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் வரும் புகா் பேருந்துகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். சின்னமனூரில் நகராட்சிப் பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கட்டாயக் கருக்கலைப்பு: இளைஞா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்ததுடன், கட்டாயக் கருக்கலைப்பு செய்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். துரைராஜபுரம் குடியிருப்பு ஜக்கம்மாள் கோவில் தெருவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு: 5 போ் கைது

தேனியில் திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், அம்பேத்கா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ். தேனி நகர திமுக துணைச் செயலரான இவா்... மேலும் பார்க்க

கண் மருத்துவா் நம்பெருமாள்சாமி உடல் தகனம்

தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும், கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்... மேலும் பார்க்க