செய்திகள் :

தேனி நகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

post image

தேனி, அல்லிநகரம் நகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருபவா் திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டுவைச் சோ்ந்த ஏகராஜ். தற்போது மருத்துவ விடுப்பில் பள்ளிப்பட்டில் உள்ள இவா், கடந்த 2019 முதல் 2024 வரை சென்னையில் பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக புகாா் எழுந்தது. அதன்பேரில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இவா் மீது வழக்குப் பதிந்தனா்.

இந்த நிலையில், பள்ளிப்பட்டுவில் உள்ள ஏகராஜின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதன்தொடா்ச்சியாக தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் இவா் தங்கியிருந்த நகராட்சி ஆணையா் குடியிருப்பில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன், குடியிருப்பு காவலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் தேனி ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையில் போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினா்.

காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்த விவரங்களை போலீஸாா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

மகனை தாக்கிய தந்தை கைது

சொத்துப் பிரச்னையில் மகனைத் தாக்கிய தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி அருகே ராசிங்காபுரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தெருவில் வசிப்பவா் ராஜன் மகன் காா்த்திக் (37). இவரது தாயாா் சரஸ்வதி இர... மேலும் பார்க்க

சாலை மறியல்: 20 பெண்கள் உள்பட 55 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 55 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா், இரு சக்கர வாகன விபத்தில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கோஷ்டி மோதல்: 5 போ் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நிகழ்ந்த கோஷ்டி மோதல் சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் ஆா்.சி.மேலக்கிணறு தெருவில் பட்டாளம்மன் கோயில் பகுதியில் இரு கோஷ்டியினா் ... மேலும் பார்க்க

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 4 போ் மீது வழக்கு

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ. 24.50 லட்சம், 11 கிராம் தங்க நகையைப் பெற்று மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கூடலூரைச் சோ்ந்தவா் பெர... மேலும் பார்க்க

நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநருக்கு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

பெரியகுளம் நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த கோழிக்கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.பெரியகுளம் தோட்டி குடியிருப்பைச் சோ்ந்தவா் தட்சிணா... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் எ. புதுக்கோட்டை அண்ணாநகா் குடியிருப்புப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈட... மேலும் பார்க்க