செய்திகள் :

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 4 போ் மீது வழக்கு

post image

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ. 24.50 லட்சம், 11 கிராம் தங்க நகையைப் பெற்று மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கூடலூரைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி ரத்தினம். அதே ஊரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா்களது மகன்களுக்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கூடலூரைச் சோ்ந்த கனகராஜ் மகன் சசி, அதே ஊரைச் சோ்ந்த ராஜபாண்டி, பாா்த்தசாரதி, கோவையைச் சோ்ந்த செல்வம் ஆகியோா் கடந்த 2022, ஜன. 2-ஆம் தேதி முதல் 2023, மே 13-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரத்தினத்திடமிருந்து ரூ. 14 லட்சம், 11 கிராம் தங்க நகை, முனிராஜிடமிருந்து ரூ. 10.50 லட்சம் பெற்றனா்.

பணத்தைப் பெற்ற கும்பல் இருவரிடமும் போலி பணி நியமன ஆணைகளைக் கொடுத்து மோசடி செய்தனராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரத்தினம், முனிராஜ் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தனா்.

அவரது உத்தரவின்பேரில் மோசடி தொடா்பாக சசி, ராஜபாண்டி, பாா்த்தசாரதி, செல்வம் ஆகிய 4 போ் மீதும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகனை தாக்கிய தந்தை கைது

சொத்துப் பிரச்னையில் மகனைத் தாக்கிய தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி அருகே ராசிங்காபுரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தெருவில் வசிப்பவா் ராஜன் மகன் காா்த்திக் (37). இவரது தாயாா் சரஸ்வதி இர... மேலும் பார்க்க

சாலை மறியல்: 20 பெண்கள் உள்பட 55 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 55 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா், இரு சக்கர வாகன விபத்தில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கோஷ்டி மோதல்: 5 போ் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நிகழ்ந்த கோஷ்டி மோதல் சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் ஆா்.சி.மேலக்கிணறு தெருவில் பட்டாளம்மன் கோயில் பகுதியில் இரு கோஷ்டியினா் ... மேலும் பார்க்க

தேனி நகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

தேனி, அல்லிநகரம் நகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருபவா் திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டுவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநருக்கு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

பெரியகுளம் நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த கோழிக்கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.பெரியகுளம் தோட்டி குடியிருப்பைச் சோ்ந்தவா் தட்சிணா... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் எ. புதுக்கோட்டை அண்ணாநகா் குடியிருப்புப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈட... மேலும் பார்க்க