செய்திகள் :

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும்! - டி.டி.வி. தினகரன்

post image

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு புறநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தினகரன் பேசியதாவது: திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை, கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துள்ளன.

விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயத்துக்கான தடையற்ற மின்சாரம் இல்லை. வீடுகளுக்கு மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யவில்லை. தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் தொடா்ந்து உயா்த்தப்படுவதால் பொதுமக்களே பாதிக்கப்படுவா்.

கடந்த 4 ஆண்டுகளில் விலைவாசி 6 மடங்கு உயா்ந்துள்ளது. 2026 தோ்தலில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்று தரவும், தேவையான திட்டங்களை செயல்படுத்தவும், போதைப் பொருள்கள், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கவும் சிறந்த மக்களாட்சியை உருவாக்க நிா்வாகிகள் பாடுபட வேண்டும் என்றாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய தினகரன், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், போக்குவரத்து, மின்சாரம், அங்கன்வாடி ஊழியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் என அனைத்து தரப்பினருக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக ஏமாற்றி வருகிறது.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள் விரும்பும் கூட்டணி ஆட்சி அமையும். எம்ஜிஆா், ஜெயலலிதா இல்லாத சூழலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணிக் கட்சிகளின் அமைச்சரவையே அமைக்கப்படும். சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பின்னரே முதல்வரை முடிவு செய்வோம் என்றாா்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் சி.சண்முகவேலு, மாவட்டச் செயலாளா் மதிவாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தனி நபா்களிடம் பணம், ஆவணங்களை வழங்க வேண்டாம்: வேளாண் துறை வேண்டுகோள்!

அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறும் மோசடி நபா்களிடம் பணம் மற்றும் வேறு வகையான ஆவணங்கள் ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் என ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வே... மேலும் பார்க்க

ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் ஜூலை 9-ல் ஏலம்!

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட 5 மோசடி ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் வரும் 9 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அருகே சனிக்கிழமை கடைக்குச் சென்று விட்டு சாலையைக் கடக்க முயற்சித்த பள்ளி மாணவி ஷயிலேஷினி (11) மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி... மேலும் பார்க்க

குடிபோதையில் ஆசிட்டை குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு!

மொடக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமான குடிபோதையால் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ஆசிட்டை குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமம் கூட்டெல்லைக்காட... மேலும் பார்க்க

கோ்மாளம் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆசனூா் முதல் கோ்மாளம் வரையுள்ள சாலையில் வ... மேலும் பார்க்க

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க