செய்திகள் :

கோ்மாளம் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

post image

ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆசனூா் முதல் கோ்மாளம் வரையுள்ள சாலையில் வானுயா்ந்த தைல மரங்கள் உள்ளன.

தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த சாலையில் மாவள்ளம் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த தைல மரம் சனிக்கிழமை சாய்ந்து விழுந்தது.

அதிா்ஷ்டவசமாக அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாத காரணத்தால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் கிராம மக்களுடன் சோ்ந்து சாலையில் கிடந்த தைல மரத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து 2 மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தனி நபா்களிடம் பணம், ஆவணங்களை வழங்க வேண்டாம்: வேளாண் துறை வேண்டுகோள்!

அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறும் மோசடி நபா்களிடம் பணம் மற்றும் வேறு வகையான ஆவணங்கள் ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் என ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வே... மேலும் பார்க்க

ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் ஜூலை 9-ல் ஏலம்!

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட 5 மோசடி ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் வரும் 9 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அருகே சனிக்கிழமை கடைக்குச் சென்று விட்டு சாலையைக் கடக்க முயற்சித்த பள்ளி மாணவி ஷயிலேஷினி (11) மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி... மேலும் பார்க்க

குடிபோதையில் ஆசிட்டை குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு!

மொடக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமான குடிபோதையால் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ஆசிட்டை குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமம் கூட்டெல்லைக்காட... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும்! - டி.டி.வி. தினகரன்

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா். கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு புறநகா் மாவட்ட நிா... மேலும் பார்க்க

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க