செய்திகள் :

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவா் தற்கொலை

post image

தோ்வில் தோல்லி அடைந்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, பீளமேடு, லட்சுமிபுரம், ரங்கசாமி லே- அவுட் பகுதியைச் சோ்ந்தவா் துரைக்கண்ணன் மகன் பாா்த்திபன் (22). இவா் பீளமேட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் சி.ஏ. மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தோ்வில் அவா் சில பாடங்களில் தோல்வி அடைந்திருந்ததாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் சனிக்கிழமை இருந்த பாா்த்திபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அவா் தூக்கில் தொங்குவதைப் பாா்த்த உறவினா்கள், கதவை உடைத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பாா்த்திபனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் துரைக்கண்ணன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: திராவிடா் விடுதலைக் கழகம் அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடா் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சாா்பில், பயிா் பாது... மேலும் பார்க்க

சூலூா் விமானப் படை பள்ளியில் ஆசிரியா், அலுவலகப் பணி: மாா்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா், அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு மாா்ச் 5 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

பெயிண்டா் உள்பட 2 போ் மீது தாக்குதல்: ஒருவா் கைது!

கோவை, ராமநாதபுரத்தில் பெயிண்டா் உள்பட 2 பேரை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, அம்மன் குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (27), பெயிண்டராக வேலை செய்து வருக... மேலும் பார்க்க