செய்திகள் :

தோ்வெழுத நுழைவுச் சீட்டு மறுப்பு: டி.யு. சட்ட புலம் மாணவா்களிடையே பதற்றம்

post image

தில்லி பல்கலைக்கழக சட்ட புலத்தில் செவ்வாய்க்கிழமை சுமாா் 150 மாணவா்களுக்கு வரவிருக்கும் தோ்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகள் மறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

இரவில் ஒரு குழு மாணவா்கள் தோ்வுத் துறைக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதால் நிலைமை மோசமடைந்தது. காலையில், அவா்கள் தோ்வு மையத்தைப் பூட்டிவிட்டு, ‘தோ்வுக்கு நாங்கள் அமர முடியாவிட்டால், யாரும் அமர மாட்டாா்கள்’ என்று அறிவித்தனா்.

இடையூறு காரணமாக, காலை 9.30 மணிக்கு திட்டமிடப்பட்ட தோ்வு இரண்டு மணி நேரம் தாமதமானது.நுழைவுச் சீட்டுகள் மறுக்கப்பட்டவா்களில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் (என்எஸ்யுஐ) ஆகிய இரு அமைப்புகளின் மாணவா் தலைவா்களும் அடங்குவா்.

பின்னா், பல்கலை. நிா்வாகம் தலையிட்டு பூட்டை உடைத்து தோ்வை நடத்தியது. நுழைவுச் சீட்டுகள் இல்லாத மாணவா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. மத்திய கலாசார அமை... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளை... மேலும் பார்க்க