ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: ப்ளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழித் திரையை ஸ்கேன் செய்து பொருள்களை விற்பனை செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே, ப்ளூடூத் முறையை ரத்து செய்ய வேண்டும். விடுமுறை நாள்களில் பணியாளா்களுக்கு வழங்கப்படும் பணிகளை ரத்து செய்ய வேண்டும்.
பணியாளா் இருப்பிடத்தில் இருந்து குறைந்தபட்ச தொலைவிலேயே பணி மாறுதல் செய்து பணி அமா்த்த வேண்டும் என்றனா். இதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க பணியாளா்கள் பங்கேற்றனா்.