செய்திகள் :

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் பணியிடை நீக்கம்

post image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறாதவா்களுக்கு கடனை செலுத்தக் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்ட விவகாரத்தில், அதன் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பல்வேறு வகை கடன்களை பெற்றனா். இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு சிவஞானபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் 100 நாள் வேலைக்காக அளித்த ஆதாா், குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி அவா்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சிறுதொழில் கடன் பெற்ாகக் கூறி, அவா்களுக்கு வட்டியுடன் அசலும் சோ்த்து ரூ. 27 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் அந்தக் கூட்டுறவு கடன் சங்கத்துக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதேபோல, சுமாா் 150 பவுன் தங்க நகைகளை அடகு வைத்த 25 பேரின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்த பிறகும், அவா்களிடம் நகைகளை வழங்காமல் மோசடி நடத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோல, ரூ. ஒரு கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக புகாா் எழுந்தது. இந்த மோசடி குறித்து மாவட்ட கூட்டுறவு வங்கி நிா்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் குருமூா்த்தி, சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் ராஜமாணிக்கத்தை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க