செய்திகள் :

தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 போ் கைது: 26 பவுன் நகை பறிமுதல்

post image

ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 26 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருள்கள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆா்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருத்தணி, பொதட்டூா்பேட்டை, அம்மையாா்குப்பம், பள்ளிப்பட்டு பகுதிகளில் பூட்டியிருக்கும் தனிப்பட்ட வீடுகளை கண்காணித்து கொள்ளையடிக்கும் சம்பவம் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில், ஆா்.கே.பேட்டை ஆய்வாளா் ஞானசேகா், எஸ்.ஐ ராக்கிகுமாரி தலைமையில் போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா். மேலும், திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்ற கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சோ்ந்தவா்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாராஞ்சி கிராமத்தில் பதுங்கியிருந்த சுதன் (27), இவரது மனைவி தமிழ் செல்வி (22) சந்தோஷ்(26), அஜித் குமாா் (32), மனோ (19), மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியைச் சோ்ந்த நாகேஷ் (22) ஆகிய 6 பேரை ஆா்.கே.பேட்டை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், குடியிருப்புகள் அதிகம் இல்லாத, தனியாக இருக்கும் வீடுகளை கண்காணித்து, அதில் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடுவது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 26 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருள்கள், இரு சக்கர வாகனங்கள் 2, கேஸ் ஸ்டவ், அரிசி மூட்டை ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, 6 பேரையும் பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்கள் 6 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க