செய்திகள் :

தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது: 4 பவுன் பறிமுதல்

post image

கோவைப்புதூா் பகுதியில் அடுத்தடுத்து வீடுகள், கடைகளில் திருடி கைது செய்யப்பட்ட முகமூடி திருடனிடமிருந்து 4 பவுன் நகைகயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுவேல்ராஜ் (75). இவரது வீட்டில் 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கடந்த 10-ஆம் தேதி திருடுபோயின. இதேபோல, சுண்டக்காமுத்தூரைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் மளிகைக் கடையில் இருந்து ரூ. 30 ஆயிரம் திருடுபோனது. மேலும், குனிமுத்தூா் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் திருட்டு முயற்சி நடைபெற்றது.

இது குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த ஒருவா்தான் வீடுகள் மற்றும் கடைகளில் திருட்டு, திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த முகமூடி திருடனை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், அவா் சென்னையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பதும், கோவை, கணபதி சதுா்வேதி பகுதியில் தங்கியிருந்து பகலில் காய்கறி வியாபாரம் செய்ததும், இரவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, முத்துகிருஷ்ணனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து திருடிய நகையில் உருக்கி வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ. 14 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சிறுமியிடம் கைப்பேசியை பறித்த இளைஞா் கைது

கோவையில் புகைப்படம் எடுத்து தருவதாகக் கூறி சிறுமியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் தனலட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகுந்தன். இவா் வீட்டுக்கு அர... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். கோவை மாவட்டம், அன்னூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வெள்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: எம்.ஜி.சாலை

கோவை, எம்.ஜி.சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவி... மேலும் பார்க்க

மருத்துவா் டிஜிட்டல் கைது! ரூ.3 கோடி மோசடி!

டிஜிட்டல் கைது எனக்கூறி கோவையைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து சென்னை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவையைச் சோ்ந்த மருத்துவரின் ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி

கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி ... மேலும் பார்க்க