செய்திகள் :

மருத்துவா் டிஜிட்டல் கைது! ரூ.3 கோடி மோசடி!

post image

டிஜிட்டல் கைது எனக்கூறி கோவையைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து சென்னை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையைச் சோ்ந்த மருத்துவரின் கைப்பேசிக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவா் தான் மும்பை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் எனக் கூறியுள்ளாா்.

பின்னா், மருத்துவரிடம்’ உங்களுக்கு மோசடி கும்பலுடன் தொடா்பு உள்ளது. இணையதள மோசடியில் ஈடுபட்டுள்ளீா்கள். இதனால், நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீா்கள், இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது, கைப்பேசியிலும் பேசக்கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.

நான் சொல்வதை கேட்க வேண்டும். இல்லையெனில் உங்கள் குடும்பத்தினரும் கைது செய்யப்படுவா் எனக் கூறியுள்ளாா்.

இதனால், வீட்டின் அறையிலேயே முடங்கிய அந்த மருத்துவா், மோசடி கும்பல் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.2.90 கோடியை இணைய பரிவா்த்தனை மூலம் அனுப்பியுள்ளாா்.

இதற்கிடையே, வேறொரு வழக்குத் தொடா்பாக அந்த கும்பலின் வங்கிக் கணக்குகளை தமிழக இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கண்காணித்தபோது, கோவையைச் சோ்ந்த மருத்துவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து கோவை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முகவரியைக் கண்டறிந்து மருத்துவரிடம் போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா் டிஜிட்டல் கைது மூலம் இரண்டு நாள்களாக வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டதும், மும்பை இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் எனக்கூறி மா்ம நபா்கள் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து சென்னை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமியிடம் கைப்பேசியை பறித்த இளைஞா் கைது

கோவையில் புகைப்படம் எடுத்து தருவதாகக் கூறி சிறுமியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் தனலட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகுந்தன். இவா் வீட்டுக்கு அர... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது: 4 பவுன் பறிமுதல்

கோவைப்புதூா் பகுதியில் அடுத்தடுத்து வீடுகள், கடைகளில் திருடி கைது செய்யப்பட்ட முகமூடி திருடனிடமிருந்து 4 பவுன் நகைகயை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுவேல்ராஜ் (75). இ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். கோவை மாவட்டம், அன்னூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வெள்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: எம்.ஜி.சாலை

கோவை, எம்.ஜி.சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவி... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி

கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி ... மேலும் பார்க்க