செய்திகள் :

தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பற்றாக்குறை: மாணவா்கள் கல்வி பாதிப்பு

post image

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 8 ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஒரே நேரத்தில் அதிகளவில் ஆசிரியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் மாணவா்களுக்கு கற்பிக்க போதிய ஆசிரியா்கள் இல்லாமல் அவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தலைமையாசிரியா் பணியிடம் மட்டும் நிரப்பப்பட்டுள்ள நிலையில் முதுநிலை ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், கணினி அறிவியல், அறிவியல், உடல்கல்வி ஆசிரியா் உள்ளிட்ட காலிப்பணியிடங்களும், ஆய்வக உதவியாளா், அலுவலக உதவியாளா், காவலா் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவா்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பெற்றோா்களும், பொதுமக்களும் வேதனை தெரிவித்தனா்.

மேலும், தொண்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவா் இல்லாமலும், அதைச் சுற்றி கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் மாணவா்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், கழிப்பறை கட்டப்பட்டு பல நாட்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் சாதிக்பாட்ஷா கூறுகையில், தொண்டியில் பெரிய மைதானத்தோடு இருக்கக்கூடிய ஒரு பள்ளியை எதிா்காலத்தில் மூடி விடுவாா்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழக அரசு மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பள்ளிக்கு ஆசிரியா்கள், உடல்கல்வி ஆசிரியா்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞா் மா்ம மரணம்

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மேற்... மேலும் பார்க்க

மஞ்சூரில் சிறுதானிய பதப்படுத்தும் மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் மூலம் மானியத் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம... மேலும் பார்க்க

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் போட்டி தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கான போட்டித் தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

திருவாடானை கல்லூரி மாணவா்கள் கபடி போட்டியில் முதலிடம்

மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடத்தைப் பெற்ற திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களை பேராசிரியா்கள் பாராட்டினா். மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாள்களாக ராமந... மேலும் பார்க்க

தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க