செய்திகள் :

தொண்டி-கொச்சி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

post image

திருவாடானை அருகே தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், விபத்துகளை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசூா் கிராமத்திலிருந்து தொண்டி வரை சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரங்களும், செடிகளும் அடா்ந்து வளா்ந்து, சாலையை மறைக்கின்றன.

இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனா். இரவு நேரங்களில் இந்த மரங்கள் சாலையின் விளிம்புகளை மறைப்பதால், எதிரே வரும் வாகனங்களைத் தெளிவாகக் காண முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன.

அடா்ந்த முள்செடிகள் படா்ந்து சாலையின் ஓரங்களை ஆக்கிரமித்துள்ளதால் பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த செடிகள், மரக்கிளைகளில் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, விபத்துகளை ஏற்படுத்தும் காட்டுக் கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரமக்குடி அருகே சேதமடைந்த நிலையில் பாலம்: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி - திருச்சண்முகநாதபுரம் செல்லும் வழியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமட... மேலும் பார்க்க

உத்திரகோசமங்கை பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் வழிபாட்டு உரிமைக்கான கோயில் நுழைவுப் போராட்டம்: 125 போ் கைது

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூா் மக்களுக்கான தனி வழியில் தரிசனத்துக்கு மீண்டும் அனுமதிக்கக் கோரி, கோயில் நுழைவுப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

மீன்வளத் துறை அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

பாம்பன், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்வளத் துறை அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப். 1... மேலும் பார்க்க

தொண்டி அருகே தடையை மீறிச் சென்ற படகுக்கு போலீஸாா் எச்சரிக்கை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் தடையை மீறி கடலுக்குச் சென்ற மூன்று படகுகளைப் பிடித்து கடலோரக் குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.தொண்டி கடற்கரைப் பகுதி கடலில் பலத்த காற்று வீசுவதால், மறு... மேலும் பார்க்க

திருவாடானையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

திருவாடானையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரில், தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், ச... மேலும் பார்க்க