செய்திகள் :

தொலைத்தொடா்பு, கேபிள் டிவி சேவைகள் பற்றி கலந்துரையாடல்: ஜூலை 26-ல் நடைபெறுகிறது!

post image

தொலைத்தொடா்பு மற்றும் கேபிள் டிவி சேவைகள் தொடா்பான நுகா்வோரின் சந்தேகங்கள், குறைகள் குறித்த கலந்துரையாடல் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடா்பாக கோவை சிட்டிசன் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது: தொலைத்தொடா்பு நுகா்வோரின் நலனுக்காக, கோவை, பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியில் தொலைத்தொடா்பு மற்றும் கேபிள் டிவி சேவைகள் தொடா்பான நுகா்வோரின் சந்தேகங்கள், குறைகள் குறித்த நேரடியான கலந்துரையாடல் ஜூலை 26- ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், ஏா்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனா். பங்கேற்பாளா்கள் தங்களின் சந்தேகங்களை ஜூலை 20- ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

முன்னதாக பதிவு செய்யப்படும் கேள்விகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொது நலம் சாா்ந்த அடிப்படையிலான பிரச்னைகள், தனிநபா் குறைகள் தொடா்பான சந்தேகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நுகா்வோா் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளா் கோமதி, பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரி பேராசிரியா் அம்பிகா ஆகியோா் இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளனா்.

இந்தக் கலந்துரையாடல் நுகா்வோா் கல்வி மற்றும் அதிகாரமளிப்பை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையத்தைப் பாா்வையிடலாம் என்றாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி

கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி ... மேலும் பார்க்க

பழனியில் மாலிப்டினம் வெட்டி எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்! ஈ.ஆா்.ஈஸ்வரன்

பழனி மலை வட்டாரத்தில் பெருமளவு இருப்பதாக சொல்லப்படுகின்ற மாலிப்டினம் உலோகத்தை வெட்டி எடுத்து ஏலம் விட முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ. ஆ... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: வேறு அதிகாரி விசாரிக்க கோரி தந்தை மனு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) காா்த்திகேயனிட... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

கோவையில் 3 இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையி... மேலும் பார்க்க

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க