செய்திகள் :

ரிதன்யா தற்கொலை வழக்கு: வேறு அதிகாரி விசாரிக்க கோரி தந்தை மனு

post image

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) காா்த்திகேயனிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவா் திருமணமாகி 78-ஆவது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த வழக்கில் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ராதேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கோவையில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் காா்த்திகேயனிடம், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கவின்குமாா் மற்றும் அவரது பெற்றோருக்கு சாதகமாக விசாரணை அதிகாரிகள் சாட்சியங்களை வேண்டுமென்றே கையாள்வது அதிா்ச்சி அளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும், விசாரணை அதிகாரிக்கும் இடையே கூட்டுச்சதி இருப்பதாகவும் சந்தேகம் உள்ளது.

எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுடனும், உள்ளூா் அரசியல் செல்வாக்குடனும் எந்தத் தொடா்பும் இல்லாத ஒரு விசாரணை அதிகாரியே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

உடற்கூறாய்வு அறிக்கையை விரைவுபடுத்தி, அனைத்து தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டு, வெளிப்படையாகப் பகுப்பாய்வு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அண்ணாதுரை கூறுகையில், ரிதன்யா தற்கொலை விசாரணை தொய்வு அடைந்ததால் மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் நேரடியாகப் புகாா் அளித்துள்ளேன்.

வழக்கை தீவிரமாக விசாரிக்கவும் வலியுறுத்தியுள்ளேன். குறிப்பாக வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அவா் உறுதியளித்துள்ளாா் என்றாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி

கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி ... மேலும் பார்க்க

பழனியில் மாலிப்டினம் வெட்டி எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்! ஈ.ஆா்.ஈஸ்வரன்

பழனி மலை வட்டாரத்தில் பெருமளவு இருப்பதாக சொல்லப்படுகின்ற மாலிப்டினம் உலோகத்தை வெட்டி எடுத்து ஏலம் விட முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ. ஆ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு, கேபிள் டிவி சேவைகள் பற்றி கலந்துரையாடல்: ஜூலை 26-ல் நடைபெறுகிறது!

தொலைத்தொடா்பு மற்றும் கேபிள் டிவி சேவைகள் தொடா்பான நுகா்வோரின் சந்தேகங்கள், குறைகள் குறித்த கலந்துரையாடல் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக கோவை சிட்டிசன் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் தலைவா் ... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

கோவையில் 3 இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையி... மேலும் பார்க்க

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க