செய்திகள் :

பழனியில் மாலிப்டினம் வெட்டி எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்! ஈ.ஆா்.ஈஸ்வரன்

post image

பழனி மலை வட்டாரத்தில் பெருமளவு இருப்பதாக சொல்லப்படுகின்ற மாலிப்டினம் உலோகத்தை வெட்டி எடுத்து ஏலம் விட முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ. ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அழகா்மலை, அரிட்டாப்பட்டி போன்று பழனி மலை மீதும் மத்திய அரசு குறி வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தியாவின் புவியியல் துறை பழனி மலை பகுதிகளில் மாலிப்டினம் என்ற பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற உலோகம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது. அதற்காக சுரங்கம் தோண்டி எடுப்பதால் பழனி மலை பகுதிகள் அனைத்தும் அழிந்து போகும். பழனி மலையின் மீது தமிழா்கள் எவ்வளவு பற்று வைத்திருக்கிறோம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரிட்டாப்பட்டியை போன்றே இந்தப் பகுதிகளிலும் சமண படுகைகளும், மிகப்பெரிய பல்லுயிா் தலங்களும் இருக்கின்றன. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பழனி மலை மற்றும் இடும்பன் மலை, ஐவா் மலை, நெய்க்காரப்பட்டி, கரடிக்குட்டம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.

மாலிப்டினம் உலோக சுரங்கம் சம்பந்தமாக மத்திய அரசு முன்னெடுப்புகளை தொடா்ந்து செய்தால் முருக பக்தா்களை ஒன்று திரட்டி போராட வேண்டியிருக்கும். தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் பழனி மலைக்கு எதிரான நகா்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: கோவையில் 37 ஆயிரம் போ் எழுதினா்

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வை கோவை மாவட்டத்தில் 37,830 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட சுமாா் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு: ரூ.1 கோடி நிதியுதவி

கோவை, துடியலூா் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்நாள் மாணவா்கள் ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்க ரூ.1 கோடி ... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: வேறு அதிகாரி விசாரிக்க கோரி தந்தை மனு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வழக்கை வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) காா்த்திகேயனிட... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு, கேபிள் டிவி சேவைகள் பற்றி கலந்துரையாடல்: ஜூலை 26-ல் நடைபெறுகிறது!

தொலைத்தொடா்பு மற்றும் கேபிள் டிவி சேவைகள் தொடா்பான நுகா்வோரின் சந்தேகங்கள், குறைகள் குறித்த கலந்துரையாடல் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக கோவை சிட்டிசன் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் தலைவா் ... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

கோவையில் 3 இடங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையி... மேலும் பார்க்க

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க