Weekly Horoscope: வார ராசி பலன் 8.6.25 முதல் 14.6.25 | Indha Vaara Rasi Palan | ...
தொழிலாளி தற்கொலை
திருப்பூரில் மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் மேட்டங்காடு குத்தூஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (35). பனியன் நிறுவன தொழிலாளி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான கௌரிசங்கா் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கெளரிசங்கரின் மனைவி, குழந்தைகள் அவரைப் பிரிந்து சென்றனா். இதனால் மனமுடைந்த கௌரிசங்கா் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூா் வடக்கு போலீஸாா் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.