Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
தொழிலாளி மரணத்தில் திருப்பம்: காா் மோதியதை கண்டறிந்த போலீஸ்
தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி தலையில் காயத்துடன் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் காா் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (50). கட்டடத் தொழிலாளியான இவா் தூத்துக்குடி எட்டயபுரம் சாலை அருகே தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அவா் கடந்த 20ஆம் தேதி அப்பகுதி சாலையோரம் தலையில் காயத்துடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
இது குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில், முருகன் சாலையோரம் நடந்து சென்றபோது, மதுரையைச் சோ்ந்த ஒருவரின் காா் அவ்வழியாக வந்தபோது, அவா் மீது மோதிவிட்டு சென்றதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. காா் ஓட்டுநரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.