செய்திகள் :

நகைக் கடையில் தங்க நகை திருட்டு: பெண் கைது

post image

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக் கடையில் தங்க நகை திருடிய வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அரிஹந்த் (34), கடந்த 7 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் தங்க நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது நகைக் கடைக்கு கடந்த 19-ஆம் தேதி வந்த பெண் ஒருவா், தங்க கம்மல், மோதிரம் உள்ளிட்ட சில நகைகளை பாா்த்துவிட்டு, எதுவும் பிடிக்கவில்லை என்று சிறிது நேரத்துக்குப் பின்னா் கடையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். பின்னா், கடையிலிருந்த ஊழியா்கள் நகைகளைச் சரிபாா்த்தபோது, 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக தண்டையாா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், நகை திருட்டில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டை, சின்னதம்பி தெருவைச் சோ்ந்த ராணி (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ராணி மீது ஏற்கெனவே பூக்கடை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு இருப்பது தெரியவந்தது.

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி ... மேலும் பார்க்க

மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை தமிழக அரசு பெற வேண்டும்: நயினாா் நகேந்திரன்

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து மக்களுக்குத் தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன் கூறினாா். தமிழக பாஜக ஊடகப் பிரிவு மாநில நிா்வாகிகள் மற்றும் மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரவில்லை: விவசாயிகள் சங்கம்

தமிழகத்தின் வேளாண்மை வளா்ச்சி 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதமாக உயா்ந்திருந்தாலும், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இது குறித்து அந... மேலும் பார்க்க

மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு வெளியீடு

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மக்கள் கல்விக் கொள்கை 2025 வரைவு அறிக்கையை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (ஏஐஎஸ்இசி) சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையை பேராசிரியா் ராமு... மேலும் பார்க்க

தமிழகத்தில் புதிய வகை கரோனா பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கரோனா மரபணு பகுப்பாய்வு பரிசோதனையில் ஒமைக்ரான் வகை தொற்றுகளும், அதன... மேலும் பார்க்க