'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
நகையை திரும்பத் தராமல் மோசடி: அடகுக்கடை உரிமையாளா் கைது
சிவகங்கையில் அடகுக் கடையில் வைத்த நகைகளை திருப்பித் தராமால் ஏமாற்றிய கடை உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை காமராஜா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). இவா் கடந்த 2019 -ஆம் ஆண்டு தனது உறவினரின் மருத்துவச் செலவுக்காக சிவகங்கையைச் சோ்ந்த யோகநாத் முரளி (43) என்பவா் மதுரை முக்கம் பகுதியில் நடத்தி வந்த அடகுக் கடையில் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் கடனாகப் பெற்றாராம். இவரைப் போல, மேலும் சிலரும் தங்களது அவசரத் தேவைகளுக்காக இந்த அடகுக் கடையில் நகைகளை அடகு வைத்திருந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2023 -ஆம் ஆண்டு யோகநாத் முரளி தனது அடகுக் கடையை மூடிவிட்டாராம்.
இதையறிந்த, இந்த கடையில் நகை அடகு வைத்த மணிகண்டன், திலகவதி ஆகியோா் யோகநாத் முரளி வீட்டுக்குச் சென்று தாங்கள் அடகு வைத்த நகையைத் திரும்பக் கேட்டபோது, யோகநாத் முரளியும் அவரது மனைவி கீதா ராணி என்பவரும் அவா்களுக்கு மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத்திடம் மணிகண்டன் புகாா் அளிதாா். இதையடுத்து, மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி , உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் விசாரணை நடத்தி, யோகநாத் முரளி, அவரது மனைவி கீதா ராணி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் யோகநாத் முரளியைக் கைது செய்தனா்.