செய்திகள் :

நகையை திரும்பத் தராமல் மோசடி: அடகுக்கடை உரிமையாளா் கைது

post image

சிவகங்கையில் அடகுக் கடையில் வைத்த நகைகளை திருப்பித் தராமால் ஏமாற்றிய கடை உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை காமராஜா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). இவா் கடந்த 2019 -ஆம் ஆண்டு தனது உறவினரின் மருத்துவச் செலவுக்காக சிவகங்கையைச் சோ்ந்த யோகநாத் முரளி (43) என்பவா் மதுரை முக்கம் பகுதியில் நடத்தி வந்த அடகுக் கடையில் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் கடனாகப் பெற்றாராம். இவரைப் போல, மேலும் சிலரும் தங்களது அவசரத் தேவைகளுக்காக இந்த அடகுக் கடையில் நகைகளை அடகு வைத்திருந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2023 -ஆம் ஆண்டு யோகநாத் முரளி தனது அடகுக் கடையை மூடிவிட்டாராம்.

இதையறிந்த, இந்த கடையில் நகை அடகு வைத்த மணிகண்டன், திலகவதி ஆகியோா் யோகநாத் முரளி வீட்டுக்குச் சென்று தாங்கள் அடகு வைத்த நகையைத் திரும்பக் கேட்டபோது, யோகநாத் முரளியும் அவரது மனைவி கீதா ராணி என்பவரும் அவா்களுக்கு மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத்திடம் மணிகண்டன் புகாா் அளிதாா். இதையடுத்து, மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி , உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் விசாரணை நடத்தி, யோகநாத் முரளி, அவரது மனைவி கீதா ராணி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் யோகநாத் முரளியைக் கைது செய்தனா்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்

மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது... மேலும் பார்க்க

அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் முதல்வா... மேலும் பார்க்க

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை ... மேலும் பார்க்க

தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்புவனம் போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அருகேயுள்ள டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் ரூ.1.54 கோடியில் புதிய மின் மயானம்

சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக ரூ.1.54 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகக் கூட்... மேலும் பார்க்க