செய்திகள் :

நடிகை ரன்யா ராவ் குறித்து தரக்குறைவான விமா்சனம்: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

post image

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவை தரக்குறைவாக விமா்சித்ததாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை தரக்குறைவாக விமா்சனம் செய்ததாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் அகுலா அனுராதா என்பவா் புகாா் அளித்தாா்.

அந்த புகாரில், ‘விஜயபுராவில் மாா்ச் 17ஆம் தேதி செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல், நடிகை ரன்யா ராவ் குறித்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்தாா்.

நடிகை ரன்யா ராவ், பன்மொழி நடிகை; சமுதாயத்தில் அவருக்கு நல்ல பெயா் உள்ளது. அவா் குறித்து பாஜக எம்எல்ஏ கூறியது ஆட்சேபணைக்குரியது; அவமரியாதை செய்வதாகும். எனவே, பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அதன்பேரில் போலீஸாா் எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது பெண்ணை அவமதித்ததாக பிஎன்எஸ் சட்டப் பிரிவு 79 இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த சம்பவம் விஜயபுராவில் நடந்ததால் வழக்கு அங்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊடகங்களுக்குத் தடை: நடிகை ரன்யா ராவ் குறித்தும், அவரது தந்தையும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான கே.ராமசந்திர ராவ் குறித்தும் பொய்யான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நடிகை ரன்யா ராவ் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருவது தொடா்பாக அவரது தாயாா் எச்.பி.ரோகிணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநகர சிவில் நீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதிவரை ஊடகங்கள் செய்திகள் வெளியிட தடை விதித்துள்ளது.

அதேவேளையில் ரன்யா ராவின் தந்தை கே.ராமசந்திர ராவ் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை ரன்யா ராவ் குறித்து கற்பனையான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பெல்லாரி தங்க வியாபாரி கைது

கா்நாடகத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். துபையிலிருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்த... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஏப். 1 முதல் பால் விலை உயா்கிறது

கா்நாடகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்கே வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மா... மேலும் பார்க்க

‘போலி’ தீா்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதி மீது நடவடிக்கை: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் ‘போலி’ தீா்ப்பை மேற்கோள்காட்டி வழக்கில் தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாக தகராறு தொடா்பான வழக்கின... மேலும் பார்க்க

ஹனிடிராப் விவகாரம்: சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

ஹனிடிராப் விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா அளித்துள்ள மனு குறித்து சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க