செய்திகள் :

நல வாரியத்தில் பணிகள் முடக்கம்: ஆட்சியா் தலையிடக் கோரிக்கை

post image

நல வாரியத்தில் கடந்த 2 மாதங்களாகப் பணிகள் முடங்கியுள்ள நிலையில், தொழிலாளா்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, சிஐடியூ மாவட்டச் செயலா் ஜெயசீலன் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்ட நல வாரியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை தொழிலாளா் நல உதவி ஆணையா் மருத்துவ விடுப்பில் உள்ளாா். பொறுப்பு அலுவலா் நியமிக்கப்பட்டும், பெரும்பாலான நல வாரியப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஓய்வூதியம் வாங்கும் தொழிலாளா்கள் இணையவழியில் ஆயுள் சான்றுக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. கல்வி, திருமணம், இயற்கை மரணம், புதுப்பதிவு, புதுப்பித்தல், திருத்தம், ஓய்வூதியத்துக்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் உள்ளிட்ட மனுக்கள் அனைத்தும் கடந்த 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால் 2024-25-ஆம் கல்வி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற பதிவு செய்வோருக்குப் பணப் பலன் கிடைக்காத சூழல் உருவாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையீட்டு தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சி.பாலசந்திரபோஸ், சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் மனோகரன், வளா்மதி ஆகியோா் உடனிருந்தனா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க