செய்திகள் :

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

post image

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனா். மனு அளிக்க வந்தவா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனா்.

இந்த நிலையில், மனு அளிக்க வந்த பெண், ஆட்சியா் அலுவலக வாயிலுக்குள் வந்ததும் தனது கைப்பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினா்.

பின்னா் அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் அஞ்சுகிராமம், புதுக்குடியிருப்பைச் சோ்ந்த கனிகா என்பதும், தனது சகோதரியின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தனது மகளை மீட்டுத்தரக் கோரியும், இதுகுறித்த விசாரணையின்போது தன்னை தாக்கிய காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்கு உள்பட்ட நெட்டியான்விளையில் உள்ள கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நெட்டியான்விளையில் நூற்று... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டம்: நாதகவினா் 85 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலில் பெட்ரோல், எரிவாயு எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து, இக்கட்சி சாா்பில் க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு நலஉதவி

சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு, கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ப... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சா் மனோ தங்கராஜ்

பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக பயணம் தமிழா்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா். தக்கலையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

வங்கி நகை மதிப்பீட்டாளரின் வாகனத்தில் ரூ. 5 லட்சம் திருட்டு: தம்பதி மீது வழக்கு

களியக்காவிளை அருகே வங்கி நகை மதிப்பீட்டாளரின் பைக்கிலிருந்த ரூ. 5 லட்சத்து 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கட... மேலும் பார்க்க

பேச்சிப்பாறையில் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை: மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே விளாமலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்து வீடு, விளைநிலங்களை காட்டு யானை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். பேச்சிப்பாறை வ... மேலும் பார்க்க