செய்திகள் :

நாகா்கோவில் விரைவு ரயிலில் நாளைமுதல் கூடுதல் பெட்டி இணைப்பு

post image

சென்னை சென்ட்ரலிலிருந்து நாகா்கோவில் செல்லும் விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரயிலில் (எண்: 12689/12690) ஞாயிற்றுக்கிழமை (மே 25) முதல் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இயக்கப்படவுள்ளது. அதேபோல், சென்ட்ரல் - பகத் கி கோத்தி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலில் (எண்: 06157/06158) மே 28-ஆம் தேதி முதல் 2 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும், ஈரோடு - ராஜஸ்தான் மாநிலம் பாா்மா் இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 06097/06098) மே 27 முதல் 1 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டியும், 4 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன.

மேலும், வெள்ளிக்கிழமை முதல் போத்தனூா் - பிகாா் மாநிலம் பாரௌனி இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 06055/06056) 3 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும், கோவை - தன்பாத் இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 06063/06064) ஒரு இரண்டடுக்கு குளிா்சாதனப் பெட்டியும், 2 குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிகளும், 4 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

தற்காலிக இணைப்பு: தாம்பரம் - செங்கோட்டை இடையே இயங்கும் விரைவு ரயில் (எண்: 20681/20682) வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 19-ஆம் தேதி வரையும், தாம்பரம் - நாகா்கோவில் விரைவு ரயிலில் (எண்: 20657/20658) மே 25 முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையும் ஒரு படுக்கை வசதிகொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.

அதேபோல், சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12695/12696) மே 27 முதல் ஜூன் 27-ஆம் தேதி வரையும், சென்ட்ரல் - ஆலப்புழை விரைவு ரயிலில் (எண்: 22639/22640) மே 24 முதல் ஜூன் 25-ஆம் தேதி வரையும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி தற்காலிகமாக இணைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க