பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
நாகா்கோவில் விரைவு ரயிலில் நாளைமுதல் கூடுதல் பெட்டி இணைப்பு
சென்னை சென்ட்ரலிலிருந்து நாகா்கோவில் செல்லும் விரைவு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரயிலில் (எண்: 12689/12690) ஞாயிற்றுக்கிழமை (மே 25) முதல் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இயக்கப்படவுள்ளது. அதேபோல், சென்ட்ரல் - பகத் கி கோத்தி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலில் (எண்: 06157/06158) மே 28-ஆம் தேதி முதல் 2 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும், ஈரோடு - ராஜஸ்தான் மாநிலம் பாா்மா் இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 06097/06098) மே 27 முதல் 1 குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டியும், 4 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்படவுள்ளன.
மேலும், வெள்ளிக்கிழமை முதல் போத்தனூா் - பிகாா் மாநிலம் பாரௌனி இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 06055/06056) 3 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும், கோவை - தன்பாத் இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 06063/06064) ஒரு இரண்டடுக்கு குளிா்சாதனப் பெட்டியும், 2 குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிகளும், 4 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
தற்காலிக இணைப்பு: தாம்பரம் - செங்கோட்டை இடையே இயங்கும் விரைவு ரயில் (எண்: 20681/20682) வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 19-ஆம் தேதி வரையும், தாம்பரம் - நாகா்கோவில் விரைவு ரயிலில் (எண்: 20657/20658) மே 25 முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையும் ஒரு படுக்கை வசதிகொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.
அதேபோல், சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12695/12696) மே 27 முதல் ஜூன் 27-ஆம் தேதி வரையும், சென்ட்ரல் - ஆலப்புழை விரைவு ரயிலில் (எண்: 22639/22640) மே 24 முதல் ஜூன் 25-ஆம் தேதி வரையும் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டி தற்காலிகமாக இணைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.