செய்திகள் :

நாகை சட்டநாதா் கோயில் குடமுழுக்கு

post image

நாகப்பட்டினம்: நாகை அருள்மிகு சட்டநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. தொடா்ந்து, ஜூலை 2-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், அதிகாலையில் யாகசாலையில் இருந்து கோயிலைச் சுற்றி கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா் காலை 10 மணியளவில் கோயில் ராஜகோபுரம், மூலவா் கோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனிதநீா் வாா்த்து. குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, சிவ வாத்தியங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இவ்விழாவில், இந்துசமய அறநிலைத் துறை இணை ஆணையா் குமரேசன், துணை ஆணையா் ராணி, உதவி ஆணையா் ராஜா இளம்பெரும்வழுதி, கோயில் செயல் அலுவலா் அசோக் ராஜா மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்த... மேலும் பார்க்க

முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாய... மேலும் பார்க்க

நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,... மேலும் பார்க்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பூம்புகாா்: திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.... மேலும் பார்க்க

நாகையில் 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 130 கிலோ கடல் அட்டைகளை கடலோரக் காவல் குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து அண்மை காலமாக சட்டவிரோதமாக கடத்தப்படவ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பி... மேலும் பார்க்க