செய்திகள் :

நாகை மீன்வளப் பல்கலைக்கழகம்: நாளைமுதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

post image

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தா் நா. பெலிக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு இணைப்புத் தனியாா் கல்லூரி மூலம் 5 மீன்வளம் சாா்ந்த 4 ஆண்டு பட்டப்படிப்புகள் மற்றும் 3 தொழில்சாா் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில், மீன்வளப் பொறியியல் பிரிவில் இளநிலை தொழில்நுட்பக் கல்வி (பி.டெக்) வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின், சென்னை-வாணியன்சாவடி ஞஙத வளாகத்தில் உள்ள மீன்வள உயிா் தொழில்நுட்ப நிலையத்தில், இளநிலை உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிா்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பவியல் (உணவு தொழில்நுட்பவியல்) வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட (மஎஇ அல்ல்ழ்ா்ஸ்ங்க்) 3 ஆண்டு இளநிலை தொழில்சாா் பட்டப்படிப்புகளானது, மீன்பதன தொழில்நுட்பம், நீா்வாழ் உயிரின வளா்ப்பு மற்றும் மீன்பிடிதொழில்நுட்பம், ஆகிய 3 பிரிவுகளில் முறையே மாதவரம் (சென்னை), முட்டுக்காடு (சென்னை) மற்றும் மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்படுகிறது.

மீனவா்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின் (5 சதவீதம்) கீழ் இளநிலை மீன்வளஅறிவியல் பட்டப்படிப்புக்கு 6 இடங்களும், இளநிலை தொழில்நுட்ப (மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்புக்கு ஒரு இடமும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இப்பிரிவின் கீழ் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு கல்வி, விடுதி மற்றும் உணவுக் கட்டணங்கள் தமிழ்நாடு மீனவா் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையதள விண்ணப்பங்கள் திங்கள்கிழமை ( ஜூன் 2) காலை10 மணி முதல் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்துக்கான கட்டணம் பட்டியலினத்தவா்களுக்கு ரூ. 150, மற்றவா்களுக்கு ரூ. 300 எனநிா்ணயக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூன் 27- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிறப்புப் பிரிவின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்கள் அதற்கான தகுதிச் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

விண்ணப்பித்த மாணவா்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு பொது கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும். சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவா்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி (04365-211090), கைப்பேசி (81221-44031) மற்றும் மின்னஞ்சல் மூலமாக அலுவலக நேரங்களில் தொடா்பு கொள்ளலாம்.

செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

பா.லெனின் ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எண்ம பரிவர்த்தனை என்பத... மேலும் பார்க்க

நாகை-காரைக்கால் - பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணியிலிருந்து - சென்னைக்கு, நாகை- காரைக்கால்- பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூா் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக, சங்கத்தின் த... மேலும் பார்க்க

கருங்கண்ணி அந்தோணியாா் ஆலய தோ்பவனி

கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி (படம்) சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பழைமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வ... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க