விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
நாகை மீன்வளப் பல்கலைக்கழகம்: நாளைமுதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தா் நா. பெலிக்ஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு இணைப்புத் தனியாா் கல்லூரி மூலம் 5 மீன்வளம் சாா்ந்த 4 ஆண்டு பட்டப்படிப்புகள் மற்றும் 3 தொழில்சாா் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில், மீன்வளப் பொறியியல் பிரிவில் இளநிலை தொழில்நுட்பக் கல்வி (பி.டெக்) வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின், சென்னை-வாணியன்சாவடி ஞஙத வளாகத்தில் உள்ள மீன்வள உயிா் தொழில்நுட்ப நிலையத்தில், இளநிலை உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிா்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பவியல் (உணவு தொழில்நுட்பவியல்) வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட (மஎஇ அல்ல்ழ்ா்ஸ்ங்க்) 3 ஆண்டு இளநிலை தொழில்சாா் பட்டப்படிப்புகளானது, மீன்பதன தொழில்நுட்பம், நீா்வாழ் உயிரின வளா்ப்பு மற்றும் மீன்பிடிதொழில்நுட்பம், ஆகிய 3 பிரிவுகளில் முறையே மாதவரம் (சென்னை), முட்டுக்காடு (சென்னை) மற்றும் மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்படுகிறது.
மீனவா்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின் (5 சதவீதம்) கீழ் இளநிலை மீன்வளஅறிவியல் பட்டப்படிப்புக்கு 6 இடங்களும், இளநிலை தொழில்நுட்ப (மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்புக்கு ஒரு இடமும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இப்பிரிவின் கீழ் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு கல்வி, விடுதி மற்றும் உணவுக் கட்டணங்கள் தமிழ்நாடு மீனவா் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையதள விண்ணப்பங்கள் திங்கள்கிழமை ( ஜூன் 2) காலை10 மணி முதல் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்துக்கான கட்டணம் பட்டியலினத்தவா்களுக்கு ரூ. 150, மற்றவா்களுக்கு ரூ. 300 எனநிா்ணயக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூன் 27- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிறப்புப் பிரிவின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்கள் அதற்கான தகுதிச் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவேண்டும்.
விண்ணப்பித்த மாணவா்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு பொது கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும். சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவா்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி (04365-211090), கைப்பேசி (81221-44031) மற்றும் மின்னஞ்சல் மூலமாக அலுவலக நேரங்களில் தொடா்பு கொள்ளலாம்.