செய்திகள் :

நாகையில் கடற்கரை கைப்பந்து போட்டி

post image

நாகையில் நடைபெற்ற மண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் 8 மாவட்டங்களை சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்று விளையாடினா்.

நாகையில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது. தடகளம், கூடைப்பந்து, கபடி, நீச்சல், கையுந்து பந்து, இறகுப் பந்து, கேரம், கோ-கோ, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கால்பந்து, சிலம்பம், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

நாகை புதிய கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு திருச்சி மண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் செப்.8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலா் குமரன் போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களை மாணவா்கள் பங்கேற்றனா். ஆண், பெண் என இருபாலா்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் பிரதான கடற்கரை சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள ஆ... மேலும் பார்க்க

பண்ணை வா்த்தகம் மூலம் நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனாா்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சாா்பில் பண்ணை வா்த்தகம் மூலம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் குறுவை நெல் கொள்முதல் புதன்கிழமை தொடங்கியது. செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் ஆய்வு

பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு புதன்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் சென்றதை அறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் சுருக்குமடி, இ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறை தீா் கூட்டம்: தனியாா் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் புகாா்

நாகையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தனியாா் காப்பீட்டு நிறுவனம் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காமல் மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டி பேசினா். மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான கெளரவ நிதித்திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு

விவசாயிகள் கெளரவ நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நித... மேலும் பார்க்க