செய்திகள் :

நாகையில் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

post image

நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை (ஆக.1) தொடங்கிவைக்கிறாா்.

நாகை மாவட்டத்தில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா, ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்கல்வி நிலைய வளாகத்தில் ஆக.1-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைக்கிறாா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி வரவேற்கிறாா். புத்தகத் திருவிழாவில், நாள்தோறும் மாலை கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், உரைவீச்சு, நூல் வெளியீடு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

விழாவில், எழுத்தாளா்கள், கவிஞா்கள், பேச்சாளா்கள், திரைப்பட இயக்குநா், திரைப்பட பாடலாசிரியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திரைப்பட இசையமைப்பாளா்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மேலும், நாள்தோறும் மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, பழைமையான காா்கள் கண்காட்சி, பெண்கள் சிறுமிகளுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, ஆண்கள் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள், மாணவா்களுக்கான வினாடி வினா போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாகையில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் நீா்நிலைகளில் இலவசமாக மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் நீா்நிலைகளில் களிமண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள விவச... மேலும் பார்க்க

நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாகூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கியுள்ளன. நாகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளில் 188 தூய்மைப் பணியாளா்கள் தனியாா் ஒப்பந்த நிறுவனம்... மேலும் பார்க்க

ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதா் சங்கத்தினா் 44 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (30). இவரது மனைவி வெண்ணிலா (25).... மேலும் பார்க்க

நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்

நாகை நீலாயதாட்சிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. நாகையில் உள்ள புகழ்பெற்ற காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்... மேலும் பார்க்க

ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை

தலைஞாயிறு பகுதியில் செல்லும் அரிச்சந்திரா நதி பாசன ஆற்றில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரிச்சந்திரா நதி ஆற்றின் பாச... மேலும் பார்க்க