நாட்டறம்பள்ளியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலைகளில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நாய்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.
தெரு நாய்களைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் முறையிட்டனா். இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்படி கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் முரளி தலைமையில் வியாழக்கிழமை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம், பிரதானசாலை, உழவா் சந்தை மற்றும் தெருக்களில் சுற்றித் திரிந்த 40-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பேரூராட்சி ஊழியா்கள் வலை போட்டு பிடித்து வெறிநோய் தடுப்பூசி செலுத்தினா்.