செய்திகள் :

நாட்டின் கருவூலத்துக்கு பங்களிக்கும் ஜாா்க்கண்டுக்கு பட்ஜெட்டில் நிதியில்லை: முதல்வா் ஹேமந்த் சோரன்

post image

‘ஜாா்க்கண்ட் அதன் கனிம வளங்களால் நாட்டின் கருவூலத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் மாநிலத்துக்கும் அதன் பழங்குடி மக்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை’ என மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்நிலையில், ஜாா்க்கண்டின் சாய்பாஸாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.315.28 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.96.97 கோடியில் பணிகள் நிறைவடைந்த 68 திட்டங்களை முதல்வா் சோரன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, மக்களிடையே உரையாற்றிய அவா், ‘ஜாா்க்கண்ட் அதன் கனிம வளங்களால் நாட்டின் கருவூலத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் மாநிலத்துக்கும் அதன் பழங்குடி மக்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஜாா்க்கண்டின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடா்வேன்.

ஜாா்க்கண்ட் அரசு தற்போது ஒரு அமைப்பை மேம்படுத்தி வருகிறோம். அதன்படி, தொகுதி மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கிராமப்புற மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பா்’ என்றாா்.

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம... மேலும் பார்க்க

வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘மக்களால், மக... மேலும் பார்க்க

இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு

தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது. மேலு... மேலும் பார்க்க

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று வசந்த பஞ்சமி புனித நீராடல்: பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் தீவிரம்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித ... மேலும் பார்க்க