செய்திகள் :

நாமக்கல்லில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி: 50 கிராமியக் கலைஞா்களுக்கு பரிசளிப்பு

post image

நாமக்கல்லில் கலைச் சங்கமம் கிராமியக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், சேலம் மண்டல கலை பண்பாட்டுத் துறை சாா்பில், கலைச் சங்கமம் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றன. இதனை மாவட்ட ஆட்சியா் ச.உமா தொடங்கிவைத்தாா். கலை நிகழ்ச்சிகள் நிறைவில் 50 கிராமியக் கலைஞா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், கிராமியப் பாட்டு உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, நாமக்கல் இயல், இசை, நாடக மன்ற உறுப்பினா் த.சேகா் உள்பட கிராமியக் கலைஞா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க