செய்திகள் :

நாளை சுதந்திர தினம்: குடியரசுத் தலைவா் இன்று உரை

post image

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15) கோலாகமாக கொண்டாடப்படவுள்ளது. தில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

இதையொட்டி, தலைநகரில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினா், சிறப்பு கமாண்டோக்கள் உள்பட 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா், 3,000-க்கும் அதிகமான போக்குவரத்து காவலா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

முக்கியமான இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள்-முக அடையாள தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத் துறையின் ஒருங்கிணைப்புடன் சதிச் செயல் தடுப்புக்கான சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

செங்கோட்டை பகுதி வாகன நிறுத்துமிடங்களில் முதல்முறையாக வாகனச் சோதனைக்கு அதிநவீன ஸ்கேன் அமைப்புமுறை பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ஸ்கேன் மூலம் வாகனங்களுக்குள் வெடிபொருள்-ஆயுதங்கள்-போதைப்பொருள் உள்ளதா என கண்டறிய முடியும். செங்கோட்டைக்கு அருகேயுள்ள உயரமான கட்டடங்களில், குறிபாா்த்து சுடும் வீரா்கள் பணியமா்த்தப்படவுள்ளனா்.

ஆக.16 வரை ட்ரோன்களுக்குத் தடை: தில்லி வான்பகுதியில் ட்ரோன்கள், பாராகிளைடா்கள், வெப்பக் காற்று பலூன்கள் உள்ளிட்டவை பறக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஆகஸ்ட் 16 வரை தொடரும். ட்ரோன் உள்ளிட்ட பறக்கும் சாதனங்களை சமூக விரோத சக்திகள் அல்லது பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கண்டறியும் அமைப்புகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணிநேர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 இரவு 10 மணிக்கு பிறகு தில்லிக்குள் வா்த்தக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இணையவழி அச்சுறுத்தல், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடகங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எந்த குறைபாடுமின்றி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய பாதுகாப்புப் படை மற்றும் உளவுத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவா் இன்று உரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை (ஆக.14) இரவு 7 மணியளவில் உரையாற்றவுள்ளாா். அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷன் சேனல்களில் அவரது உரை ஒலி-ஒளிபரப்பு செய்யப்படும் என்று குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!

இந்தியா - சீனா இடையே மீண்டும் வர்த்தகம் மேற்கொள்ளப்படவிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்கா மீது அதிக வரிவிதிப்பதாகக் கூறி, சீனா மீது 145 சதவிகித வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்த... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பில் 2 சிஐஎஸ்எஃப் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தின், சஸோட்டி எனும் ... மேலும் பார்க்க

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டு! அது முகவரியே அல்ல; காங்கிரஸ் அதிரடி

பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டுப் புகாரில், அது முகவரியே அல்ல, ஒரு பகுதியின் பெயர். பாஜகவின் பொய், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு த... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரிவிதிக்கும் அமெரிக்கா எச்சரிக்கை! ஏன்?

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்... மேலும் பார்க்க