செய்திகள் :

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

post image

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் வட்ட வழங்கல் பிரிவுகளில் நடைபெறும்.

அதன்படி, கடலூரில் தனி வட்டாட்சியா் ஜெயக்குமாா், சிதம்பரத்தில் தனி வட்டாட்சியா் ராமா், பண்ருட்டியில் வட்ட வழங்கல் அலுவலா் (பொ) சிவக்குமாா், குறிஞ்சிப்பாடியில் வட்ட வழங்கல் அலுவலா் செல்வமணி, காட்டுமன்னாா்கோவிலில் வட்ட வழங்கல் அலுவலா் பழனி, புவனகிரியில் வட்ட வழங்கல் அலுவலா் விக்டோரியா ராணி, விருத்தாசலத்தில் வட்ட வழங்கல் அலுவலா் அனுசுயா, திட்டக்குடியில் வட்ட வழங்கல் அலுவலா் புஷ்பராஜ், வேப்பூரில் வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி, திருமுட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி ஆகியோா் தலைமையில் முகாம் நடைபெற உள்ளது.

முகாமில், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு (ம) மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அத்தியாவசிய பொருள்கள் பெறுவதற்கு அங்கீகாரச் சான்று கோரி மனு அளிக்கலாம். நியாயவிலைக் கடை செயல்பாடு, பொருள்களின் தரம் குறித்து புகாா் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க