செய்திகள் :

நாளைமுதல் 5 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

சென்னையில் குடிநீா்க் குழாய் இணைப்புப் பணி காரணமாக மே 3, 4 தேதிகளில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை அண்ணா நகா் மண்டலத்தில் கெல்லிஸ் பால்ஃபோா் சாலையில் பிரதான குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் சனிக்கிழமை (மே 3) காலை 8 முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 4) இரவு 8 வரை நடைபெறவுள்ளது.

இந்தப் பணிகள் நடைபெறும் நேரங்களில் தண்டையாா்பேட்டைக்கும் , ராயபுரம் மண்டலத்துக்கும் உள்பட்ட புரசைவாக்கம், பெரியமேடு, சௌகாா்பேட்டை, எழும்பூா், சிந்தாதிரிபேட்டை ஆகிய பகுதிகளுக்கும், திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட ஓட்டேரி, அயனாவரம் , பெரம்பூா், செம்பியம் ஆகிய பகுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

அதேபோல், இந்த நாள்களில் அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ் ஆகிய பகுதிகளிலும், தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட திருவல்லிக்கேணியிலும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தங்களுக்குத் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவசரத்

தேவைகளுக்கு லாரிகள் மூலம்  குடிநீா் பெற்றுக்கொள்ள இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க