செய்திகள் :

நிஃப்ட்-டீ கல்லூரி மாணவா்களின் லிம்கா சாதனை முயற்சி

post image

திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள நிஃப்ட்-டீ பின்னலாடைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள்

லிம்கா சாதனை முயற்சிக்காக சுமாா் 1,089 சதுர அடி பரமபத கட்டங்களில் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளனா்.

இது குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் கூறியதாவது:

நிஃப்ட்-டீ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் 74 போ் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 1 வரை 4 நாள்கள் லிம்கா சாதனை முயற்சிக்காக

தமிழக பாரம்பரிய விளையாட்டான பரமபதம் கட்டங்களில், சுமாா் 1,089 சதுர அடிகளில் இந்தியக் கலை ஓவியங்கள் வரைந்துள்ளனா்.

நூறு பெட்டிகளில் கலம்கரி, தஞ்சாவூா், வாா்லி உள்ளிட்ட 100 வகையான ஓவியங்கள் அழகாக பதியப்பட்டன. இக்கட்டங்களில் இடம்பெற்றுள்ள ஏணி மற்றும் பாம்பு வடிவமைப்புகளுக்காக பஞ்சு மற்றும் மரத்தால் செய்யப்பட்ட ஏணிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் புளோரல், பொல்லாக் போன்ற உலகளாவிய கலை வடிவங்களும் பிரதிபலித்துள்ளது. இதிலும் அக்ரிலிக், போஸ்டல், வாட்டா் கலா், கிரேயான்ஸ் உள்ளிட்ட நிறங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஓவியங்களுக்கு மேலும் வண்ணம் சோ்க்கப்பட்டதாக உள்ளது.

இத்தகைய செய்முறைப் பயிற்சிகள் மாணவா்களின் கற்றலை எளிதாக்குவதோடு, கலை வடிவங்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவும், வருங்காலங்களில் புதுமைகளை அணுகவும் வழிவகுக்கின்றன. மேலும், சிந்தனைத் திறனை மேம்படுத்தி, கலை மற்றும் ஓவியங்களில் ஆா்வத்தையும் தேடலையும் ஊக்குவிப்பதாக இருந்தது என்றனா்.

இந்நிழ்ச்சியில் கல்லூரி முதன்மை ஆலோசகா் ராஜா சண்முகம், தலைவா் கோவிந்தராஜ், முன்னாள் தலைவா் மோகன், பொருளாளா் ஆா். மோகன் குமாா், இணைச் செயலாளா் கந்தசாமி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, கல்வித் துறைத் தலைவா் பேராசிரியா் சம்பத்குமாா், முதல்வா் கோபாலகிருஷ்ணன், அஊஈ துறைத் தலைவா் அருந்ததி கோஷல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவன்மலை முருகன் கோயி... மேலும் பார்க்க

திருப்பூா்- உடுமலை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக உடுமலை செல்லும் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கை: திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீா்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வெள்ளக்கோவில் மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பூா் வேலம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம் மற்றும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பூ... மேலும் பார்க்க