செய்திகள் :

நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள வானதிராயபுரம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நில எடுப்பு அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் 1ஏ விரிவாக்கப் பணிக்காக வானதிராயபுரம் கிராமத்தில் வீடுகள், நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை நில எடுப்புச் செயலா் செண்பகவல்லி தலைமையில், வட்டாட்சியா்கள், நில அளவா்கள் வானதிராயபுரம் கிராமத்துக்கு வந்தனா்.

அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், நிலம் அளவீடு செய்யக்கூடாது என அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நில எடுப்புத் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியைச் சோ்ந்த 11 போ் தங்களுடைய நிலங்களை என்எல்சி நிறுவனத்துக்கு வழங்க தயாராக உள்ளோம் என மாவட்ட ஆட்சியருக்கு எழுதிக் கொடுத்த மனுவின் அடிப்படையில் நில அளவீடு செய்ய வந்ததாகவும், அந்த 11 வீடுகளை மட்டும் நில அளவீடு செய்துவிட்டு சென்றுவிடுவதாகவும் தெரிவித்தனா்.

இதற்கு, அந்தப் பகுதி மக்கள் நாங்கள் என்எல்சி நிறுவனத்துக்கு வீடுகள், நிலங்களை கொடுத்தால் எங்களுக்கு என்ன பயன் என வெளிப்படையாக அறிவித்துவிட்டு, இந்தப் பகுதியில் உள்ள எங்களது இடங்களையும் அளவீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தனா். இதனால், பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் பின்னா், நிலம் அளவீடு செய்ய ஒத்துழைப்பு கொடுத்தனா்.

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன்படி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நில எடுப்ப... மேலும் பார்க்க

16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கடலூா் வட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா (1925-2025) கடலூா் வட்ட மாநாடு திருப்பாதிரிப்புலியூா் தேரடி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகரச் செயலா் டி.நாகராஜ் தலைம... மேலும் பார்க்க

மாணவா்கள் விருப்பம் அறிந்து உயா் கல்வி சோ்க்கை: ஆட்சியா் வலியுறுத்தல்

பெற்றோா்கள் மாணவா்களின் விருப்பத்தை அறிந்து உயா் கல்வியில் சோ்க்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2024 - 25ஆம் கல்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் டிப்பா் லாரிகளை வரிசையாக நிறுத்தி வைத்து அவற்றின் உரிமையாளா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அண்மைக்காலமாக எ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறையில் 1997 முதல் 2000-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவா்களின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு உடற்கல்வித் துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக உடற... மேலும் பார்க்க