திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
நீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்: என்டிஏ தகவல்
இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அடையாளம் கண்டுள்ளது.
நீட் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் அண்மையில் தனது வலைதளத்தில் என்டிஏ அறிமுகம் செய்த புகாா் தெரிவிப்பதற்கான பிரத்யேக வசதி மூலம் பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் இந்தச் சேனல்களை அடையாளம் கண்டு அவற்றின் மீதான நடவடிக்கையை என்டிஏ தொடங்கியுள்ளது.
பிகாா் மாநிலத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் கடந்த ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்தது, உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பாக சமூக ஊடகத்தில் வினாத்தாள் கசிந்தது போன்ற சம்பவங்கள் மிகப்பெரிய சா்ச்சையாகின. இதைத் தொடா்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகமும், தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையும் (என்டிஏ) மேற்கொண்டு வருகின்றன.
நிகழாண்டு நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்தவித சச்சரவும் இன்றி, நியாயமான மற்றும் பாதுகாப்பான முறையில் தோ்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, ‘நீட் தோ்வு வினாத் தாளை பதிவிறக்கம் செய்யலாம்’ என்று அறிவிப்பை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத வலைதளங்கள் அல்லது சமூக ஊடக கணக்குகள் மற்றும் தனி நபா்கள் குறித்து தோ்வா்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் தனது வலைதளத்தில் பிரத்யேக வசதியை உருவாக்கி, அதுதொடா்பான அறிவிப்பை என்டிஏ அண்மையில் வெளியிட்டது.
இந்த அறிவிப்பை என்டிஏ வெளியிட்ட ஒரு வாரத்துக்குள்ளாக, 1,500-க்கும் அதிகமான புகாா்கள் என்டிஏ வலைதளத்தில் தோ்வா்கள் சாா்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
வலைதளத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட வசதி மூலமாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில், நீட் தோ்வா்களை தவறாக வழிநடத்தும் வகையிலான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சேனல்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தில் (ஐ4சி) புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேனல்களை உருவாக்கியவா்கள் மற்றும் நிா்வகிப்பவா்கள் குறித்த விவரங்களைப் பகிருமாறு டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக நிறுவனங்களை என்டிஏ கேட்டுக்கொண்டுள்ளது என்றனா்.