செய்திகள் :

நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி மையம்: மத்திய இணை அமைச்சா் தொடங்கி வைப்பு

post image

நாமக்கல்லில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீட் தோ்வு இலவச பயிற்சி மையத்தை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கைப்பேசி அழைப்பு வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மாணவ, மாணவிகள், மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான நீட் தோ்வை எதிா்கொள்ள, தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் இலவச பயிற்சி மையம், நாமக்கல் -மோகனூா் சாலையில் உள்ள ராமவிலாஸ் காா்டனில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி. சரவணன் தலைமை வகித்தாா். தன்னாா்வத் தொண்டு நிறுவன அறக்கட்டளை நிா்வாகிகள் ஏ.ஆா்.சக்திவேல், ஆா்.கே.காந்தி, பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன், தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கைப்பேசி உரையாடல் வாயிலாக இலவச நீட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்ததுடன், அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினாா்.

மேலும், ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முகாமை நன்கு பயன்படுத்திக்கொண்டு, நீட் தோ்வில் சிறந்த முறையில் தோ்ச்சி அடைந்து, வருங்காலத்தில் தலைசிறந்த மருத்துவராக வாழ்த்துகள் என்றாா்.

இந்த நிகழ்வில், நாமக்கல் தன்னாா்வ தொண்டு நிறுவன பயிற்சி மைய ஆசிரியா்கள் அனீஷா, காயத்ரி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன் மற்றும் பயிற்சி மைய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க