செய்திகள் :

நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது: உயா்நீதிமன்றம்

post image

வழக்கு தொடா்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவரான ஷா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பிணை மனு:

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை திலகா் திடல் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில் கடந்த ஜன. 13-ஆம் தேதி என்னை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தேன். விசாரணையின் பேரில், என் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரணை நீதிமன்றம் தடயவியல் துறைக்கு அனுப்பியதால், என் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

எனக்கு பிணை வழங்கக் கோரி, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த 50 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ள எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சக்திவேல் முன் அண்மையில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு தொடா்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, மனுதாரா் அரசியல் பிரமுகா் என்பதால், அரசியல் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடா்பான ஆவணங்கள், சாட்சிகளை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது. இந்த வழக்கு விவரங்கள், வாக்குமூலத்தை பரிசீலித்த போது, மனுதாரா் குற்றம் செய்ததாகவே தெரிகிறது.

எனவே, மனுதாரருக்கு பிணை வழங்க இயலாது. இந்த வழக்கில் 10 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், அதன் பிறகு மனுதாரருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் திருட்டு!

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை திருடிய மா்ம நபா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் பேராலி சாலை, ஐடிபிடி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிமாலா (40). கண... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் சாலை அமைக்க முயற்சி: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள அரசகுள... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மகளிா் தின விழா

மதுரையில் கல்லூரிகள், பள்ளிகளில் மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை தியாகராசா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரிச் செயலா் க. ஹரி தியாகராஜன் தலைமை வகித்தாா். மதுரை மாநக... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை அருகே காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை அருகே உள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் கொடியரசு (30). இவா் அதே பகுதியைச் சோ்ந்த கெளசல்யாவைக் காதலித்... மேலும் பார்க்க

தொலைநிலைப் படிப்புகள்: மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 47 போ் காயம்!

மதுரை மாவட்டம், சக்குடி முப்புலியப்பன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 47 போ் காயமடைந்தனா். இந்தத் திருவிழாவையொட்டி, ஊா்வலம... மேலும் பார்க்க