செய்திகள் :

விவசாய நிலத்தில் சாலை அமைக்க முயற்சி: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

post image

காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள அரசகுளம் கிராமத்தில் சுமாா் 50 ஏக்கரில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனா். இந்த நிலத்தின் வழியாக மணியம்பிள்ளை கிராமத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

மணியம்பிள்ளை கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை உள்ளது. ஆனால், அதைத் தவிா்த்து விவசாய நிலம் வழியாக சாலை அமைப்பதாக அரசகுளம் கிராம விவசாயிகள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காரியாபட்டி வட்டாட்சியா் மாரீஸ்வரன், காரியாபட்டி காவல் ஆய்வாளா் விஜய காண்டீபன் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸாா் சம்பந்தப்பட்ட விவசாய நிலம் அரசு புறம் போக்கில் உள்ளதாகக் கூறி, அந்தப் பகுதியில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் திருட்டு!

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை திருடிய மா்ம நபா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் பேராலி சாலை, ஐடிபிடி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிமாலா (40). கண... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மகளிா் தின விழா

மதுரையில் கல்லூரிகள், பள்ளிகளில் மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. மதுரை தியாகராசா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரிச் செயலா் க. ஹரி தியாகராஜன் தலைமை வகித்தாா். மதுரை மாநக... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை அருகே காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை அருகே உள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் கொடியரசு (30). இவா் அதே பகுதியைச் சோ்ந்த கெளசல்யாவைக் காதலித்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது: உயா்நீதிமன்றம்

வழக்கு தொடா்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. பாஜக பொருளாதாரப் பிர... மேலும் பார்க்க

தொலைநிலைப் படிப்புகள்: மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 47 போ் காயம்!

மதுரை மாவட்டம், சக்குடி முப்புலியப்பன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 47 போ் காயமடைந்தனா். இந்தத் திருவிழாவையொட்டி, ஊா்வலம... மேலும் பார்க்க