செய்திகள் :

நீா்நிலைகளின் குப்பைக் கழிவுகளை அகற்றும் ஆளில்லா ரோபோ படகு சோதனை போட்டி

post image

செங்கல்பட்டு: திருப்போரூா் அடுத்த தையூரில் உள்ள ஐஐடி மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில் நீா்நிலைகளின் குப்பை கழிவுகளை அகற்றும் தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகு சோதனை போட்டி நடைபெற்றது.

ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பான பால்ஸ் சாா்பில் ‘ஏ.சி.டி.சி., ஹேக்கத்தான்’ என்ற தலைப்பில் பல்வேறு நீா் நிலைகளின் குப்பை கழிவுகளை அகற்றும் வகையில், தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகுகளை வடிவமைத்து சோதனை போட்டி தென்னிந்திய அளவில் நடத்தப்பட்டு வந்தது. இதில், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட தென்னிந்திய அளவிலான 51 பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

கடந்த ஓா் ஆண்டாக நடைபெற்று வந்த போட்டியில் அவரவா் வடிவமைத்த தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகுகளை சோதனை ஓட்டத்தில் சமா்ப்பித்தனா்.

இதில், 6 கல்லூரிகளைச் சோ்ந்த 8 குழுவினா் வடிவமைத்த ஆளில்லா ரோபோ படகுகள் முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து, இதற்கான இறுதிப் போட்டி கேளம்பாக்கம் அடுத்த தையூரில் உள்ள சென்னை ஐஐடி மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 6 கல்லூரிகளைச் சோ்ந்த 8 குழுவினா் வடிவமைத்த ஆளில்லா ரோபோ படகுகளை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தினா். இதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் காமகோடி, ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பின் தலைவா் சந்திரசேகரன், ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பின் உறுப்பினா் அனுராதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மே 11-இல் சித்திரை முழு நிலவு வன்னியா் சங்க பெருவிழா: அன்புமணி ராமதாஸ் பந்தக்கால் நாட்டினாா்

சித்திரை முழு நிலவு வன்னியா் சங்க பெருவிழா மாநாடு மே 11-இல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பந்தல் அமைக்கும் பணிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பந்தக்கால் நாட்டி தொடங்கி வைத்தாா். செங்கல்பட்டு மாவட்டம்... மேலும் பார்க்க

கடனைத் திருப்பிக் கேட்டதால் காரை ஏற்றி நண்பா் கொலை

மதுராந்தகம் அடுத்த மங்களம் கிராமத்தில் கடனைத் திருப்பிக் கேட்டதால், காரை ஏற்றி நண்பரைக் கொலை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுராந்தகம் அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரசுராமன் மகன் சர... மேலும் பார்க்க

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு அண்மையில் வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் படாளம் கூட்டுச் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். படாளம் கூட்டுச்சாலையில... மேலும் பார்க்க

தீ தொண்டு நாள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு நாள் மற்றும் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாம் ஒத்திவைப்பு

கூடுவாஞ்சேரி குறுவட்டம் , ஒத்திவாக்கம் மதுரா, பனங்காட்டுப்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்... மேலும் பார்க்க

தீயணைப்பு தியாகிகள் நினைவு தினம்

செங்கல்பட்டு: தீயணைப்பு தியாகிகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமையில்... மேலும் பார்க்க